Sunday, November 3, 2013

அவன நிறுத்தச் சொல்லு, நான் நிறுத்துறேன்...


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்று (2/11/2013) முடிவுற்றது. இதில் இந்திய அணி 3-2 என்கிற கணக்கில் இந்தத் தொடரைக் கைப்பற்றியது. கோப்பையை இந்திய அணியின் கேப்டன் டோனியிடம் வழங்கும் நிகழ்ச்சியில் வர்ணனையாளர் ரவி சாஸ்த்ரி மற்றும் டோனி ஆகியோருக்கு இடையே நடந்த உரையாடல் இங்கே தரப்பட்டுள்ளது.

Ravi Shastri: 
"WELL MS, YOU NEED TO IMPROVE YOUR TEAM BOWLING, IT WAS VERY CLOSE IF AUSSIES WOULD HAVE WICKETS IN HAND THEY COULD HAVE TAKEN MATCH AS WELL AS SERIES WITH THEM. OUR TEAM’S BOWLING NEEDS TO BE IMPROVED”



Dhoni: (In reply): 
 "YEAH WELL WE CHASED 350+ SCORES TWO TIMES IN THIS SERIES AND ALSO SCORED 383 TODAY AND NO ONE REALLY TALKED ABOUT AUSTRALIA’S BOWLING! I AM NOT GOING TO BE UNFAIR WITH MY BOWLERS."

ஏன்டா தம்பி நீ எல்லாப் பாடத்திலும் முதல் மதிப்பெண் வாங்கலைன்னு ஒரு அப்பா கேட்டதுக்கு அவர் மகன், பக்கத்துக்கு வீட்டுக்காரன் 3 பாடத்தில் பெயில், அவன நீ எதுவுமே கேக்க மாட்டேன்கிற, நான் பாஸ் ஆகிட்டேன் அதப் பத்தி மட்டும் பேசுன்னு கத்திக் கூப்பாடு போட்டானாம்.

நாயகன் திரைப்படத்தில் வரும் வசனம் அவன நிறுத்தச் சொல்லு, நான் நிறுத்துறேன்... கேட்ட மாதிரியே இருந்துது எனக்கு.