Wednesday, October 3, 2012

தமிழ்ப் பாட்டுதான் வேண்டும்

முதன்முதலாகத் தமிழ்நாட்டில் பணம் கொடுத்துப் பாட்டுக் கேட்டவர் சிவபெருமான். அதுவும் தமிழ்ப் பாட்டுதான் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

பரந்தபாரிடம் ஊரி டைப்பலி
பற்றிப் பாத்துணுஞ் சுற்ற மாயினீர்
தெரிந்த நான்மறையோர்க் கிட மாய திருமிழலை
இருந்து நீர்தமி ழோடி சைகேட்கும்
இச்சை யாற்காசு நித்தல் நல்கினீர்
அருந்தண் வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே

பொழிப்புரை:

மிக்க பூத கணங்களை, ஊர்களில் பிச்சையேற்று அதனைப் பகுத்து உண்ணும் சுற்றமாக உடையவரே, ஆராய்ந்த நான்கு வேதங்களை உணர்ந்தோராகிய அந்தணர்க்கு இடமான திருமிழலை யுள், அரிய, குளிர்ந்த வீழி மரத்தின் நிழலை இடமாகக்கொண்டவரே, நீர், இனிதிருந்து இசையைத் தமிழோடு கேட்கும் விருப்பத்தால், அத்தகைய தமிழைப் பாடியோர்க்குப் பொற்காசினை நாள்தோறும் வழங்கினீர் ; அதுபோல, அடியேனுக்கும் அருள் செய்யீர்.

-சுந்தரமூர்த்தி நாயனார், திருவீழிமிழலைப் பதிகம் எட்டாவது பாசுரம்

No comments: