கொல்கத்தா
நகரத்தில் ப்ளேக் நோய் தன் கோரதாண்டவத்தை ஆடிக்கொண்டிருந்த காலத்தில், ராமகிருஷ்ண மடம் சார்பாக சுவாமி
விவேகானந்தர் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தொண்டற்றிவந்தார்.
அப்போது ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியாமல் சீடர்கள் என்ன செய்வது
என்று விவேகானந்த சுவாமிகளிடம் சென்று ஆலோசனை கேட்டனர். அதற்கு விவேகானந்தர் 'மடத்தையும் அதன் சொத்துக்களையும்
விற்க வேண்டி வந்தாலும் பரவாயில்லை, எப்படியாவது நிதி திரட்டி வேண்டிய மருந்துப்
பொருட்களை வாங்குவோம், இந்த நோயை விரட்டி அடிப்போம், துயர் தீர்ந்த பின் மறுபடியும்
மக்களிடம் கை ஏந்திச் சென்று நிதி பெற்று மடத்தைக் கட்டிக் கொள்வோம்' என்று
ஆலோசனை வழங்கினார். மடத்தை விற்றேனும் மக்கள் துயர் துடைக்க எழுந்த மகான் எங்கே,
மடத்தைக் காக்க நீதிமன்றப் படியேறிப் போராடிக்கொண்டிருக்கும் பதர்கள் எங்கே? இன்று அவரது நூற்றைம்பதாவது
பிறந்தநாள். சுவாமி விவேகானந்தர் என்கிற பெயரைச் சொன்னாலே
கம்பீரம், தைரியம், பொறுமை, வீரம் எல்லாம் பீறிட்டு எழும். என்றைக்கும் குன்றாத இளமை வேண்டும் என்று அபிராமி பட்டர் அபிராமி
அந்தாதியில் சொன்னது சுவாமி விவேகானந்தருக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. அவருக்கு
மட்டுமே அது பொருந்தும். எத்தனயோ மகான்கள் இந்த ஞான பூமியிலே, அவர்களில்
ஒருவராம் சுவாமி விவேகானந்தருக்கு இந்த எளியவனின் நமஸ்காரங்கள்.
No comments:
Post a Comment