ஒருவரது மரணத்திற்கு சமூக வலைதளங்களில் அனுதாபம் தெரிவிக்கப் போகிறீர்களா? அப்படியானால் நீங்கள் உங்களையே கேட்டுக் கொள்ள சில கேள்விகள் உள்ளன.
1) இறந்தவர் திரைப் பிரபலமா ?
2) இறந்தவர் அரசியல் பிரபலமா ?
3) பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவரா ?
இந்தக் கேள்விகள் மூன்றுக்கும் உங்களிடம் பதில் இருந்தால் நீங்கள் அனுதாபத்தைத் தெரிவிக்கலாம்.
திரைப் பிரபலமா என்கிற கேள்விக்கு ஆம் என்று பதில் வந்தால், நீங்கள் துணிந்து களம் இறங்கலாம். இவன் அப்டி என்ன கிழிச்சுப்புட்டான் என்கிற ரீதியில் பதில்கள் வரும், அதைக் கண்டு அஞ்சுவது பேதைமை. இது போதாதென்று செத்தவன் ஜாதியைக் குறித்து தாறுமாறாக விமர்சனங்கள் வரும், இதற்கு நாமார்க்குங் குடியல்லோம் என்பது போலத் துணிந்து பதிலுரைக்க (குரைக்க) வேண்டும்.
இரண்டாவது: கேள்வி எளிது. அரசியல் பிரபலம் என்றால் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒரு சிறந்த தலைவர் என்கிற மாதிரி ஓரிரு சொற்களைச் சேர்த்து இரங்கலைத் தெரிவித்தால், யாரும் உங்கள் மீது தனிப்பட்ட தாக்குதலில் இறங்க மாட்டார்கள் என்பது திண்ணம்.
மூன்றாவது: பெரும்பான்மை சமூகத்தவர் என்றால், வாய் மற்றும் இன்ன பிறவற்றை அடைத்து அமைதி காத்தருளி, எதாவது 1980 களில் வந்த இளையராஜா பாடல் ஒன்றைப் பற்றி சிலாகித்து 4 வரி எழுதிவிட்டு ஜென் நிலையில் இருப்பது சாலச் சிறந்தது. நமது தேசம் மதச்சார்பற்றது. சினிமா சார்பற்றது என்றோ அரசியல் சார்பற்றது என்றோ இல்லை. மறந்துவிடக்கூடாது.
1) இறந்தவர் திரைப் பிரபலமா ?
2) இறந்தவர் அரசியல் பிரபலமா ?
3) பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவரா ?
இந்தக் கேள்விகள் மூன்றுக்கும் உங்களிடம் பதில் இருந்தால் நீங்கள் அனுதாபத்தைத் தெரிவிக்கலாம்.
திரைப் பிரபலமா என்கிற கேள்விக்கு ஆம் என்று பதில் வந்தால், நீங்கள் துணிந்து களம் இறங்கலாம். இவன் அப்டி என்ன கிழிச்சுப்புட்டான் என்கிற ரீதியில் பதில்கள் வரும், அதைக் கண்டு அஞ்சுவது பேதைமை. இது போதாதென்று செத்தவன் ஜாதியைக் குறித்து தாறுமாறாக விமர்சனங்கள் வரும், இதற்கு நாமார்க்குங் குடியல்லோம் என்பது போலத் துணிந்து பதிலுரைக்க (குரைக்க) வேண்டும்.
இரண்டாவது: கேள்வி எளிது. அரசியல் பிரபலம் என்றால் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒரு சிறந்த தலைவர் என்கிற மாதிரி ஓரிரு சொற்களைச் சேர்த்து இரங்கலைத் தெரிவித்தால், யாரும் உங்கள் மீது தனிப்பட்ட தாக்குதலில் இறங்க மாட்டார்கள் என்பது திண்ணம்.
மூன்றாவது: பெரும்பான்மை சமூகத்தவர் என்றால், வாய் மற்றும் இன்ன பிறவற்றை அடைத்து அமைதி காத்தருளி, எதாவது 1980 களில் வந்த இளையராஜா பாடல் ஒன்றைப் பற்றி சிலாகித்து 4 வரி எழுதிவிட்டு ஜென் நிலையில் இருப்பது சாலச் சிறந்தது. நமது தேசம் மதச்சார்பற்றது. சினிமா சார்பற்றது என்றோ அரசியல் சார்பற்றது என்றோ இல்லை. மறந்துவிடக்கூடாது.
1 comment:
சார் வீரவணக்கத்தை யாருக்கு தெரிவிப்பது ?
Post a Comment